• Apr 19 2024

வீட்டிற்குள் மறைந்திருந்த கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் வீட்டை விட்டு துரத்திய மூர்த்தி- பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் யாரும் எதிர்பாராத விதமாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அண்ணன் மூர்த்தி மீது இருந்த கோபத்தினால் வீட்டை விட்டுச் சென்ற கண்ணன் குடும்பமும் ஜீவா குடும்பமும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது.

அதிலும் கண்ணன் ஐஸ்வர்யா செய்யும் சேட்டைகள் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள் உட்படுத்தியுள்ளது.கண்ணன் கடன் வாங்கியதால் கதிர் ஜெயிலுக்கு போய்ட்டு வந்ததால் மூர்த்தி கண்ணன் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.


இந்த பிரச்சி தற்பொழுது தான் முடிவடைந்திருக்கும் நிலையில்  கண்ணன்- ஐஸ்வர்யா மீண்டும் ஒரு பிரச்சனையில் மாட்டி இருக்கின்றனர். க்ரெடிட் கார்டு பிரச்சனை முடிந்தது என பார்த்தால், வட்டிக்கும் வாங்கிய பணத்தை இரண்டு நாட்களில் தர வேண்டும் என எச்சரித்துவிட்டு செல்கிறார் ஐஸ்வர்யாவின் சித்தி.

அதன்பின் கண்ணன்- ஐஸ்வர்யா ஆகியோரை வீட்டிற்கே அழைத்து சென்றுவிடுகிறார் கதிர். அதை பார்த்து தனம் மற்றும் முல்லை ஷாக் ஆகின்றனர். அதன்பின் கதிர் பேச்சை கேட்டு அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.


அதன் பின் அடுத்த வார எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கண்ணன்- ஐஸ்வர்யா இருவரையும் வீட்டிற்குள் பார்க்கும் மூர்த்தி கடும் கோபம் ஆகி கத்துகிறார்.அவர்களை உடனே வீட்டை விட்டு வெளியேறும்படி கூறுகிறார். இறுதியில் என்ன நடக்க போகிறது என அடுத்த வாரம் தான் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement

Advertisement