• Mar 29 2024

ஹெல்மெட் அணியாமல் சென்ற அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா... பணத்தை அபராதமாக விதித்த மும்பை போலீஸ்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அமிதாப் பச்சன் அவசரமாக வேலைக்கு புறப்பட்டுச் சென்ற நேரத்தில் வழியில் போக்குவரத்து நெருக்கடியால் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாமல் தவித்தார். பின்னர் உடனே காரை விட்டு இறங்கி அந்த வழியாக சென்ற மோட்டார் வாகனத்தில் உதவி கேட்டு அதன் பின்னிருக்கையில் அமர்ந்து சென்றார்.


மேலும் அந்த மோட்டார் வாகனத்தை ஓட்டியவரும், அதில் அமர்ந்து பயணம் செய்தவரும் ஹெல்மெட் அணியவில்லை. வாகனத்தை ஓட்டியவர் தொப்பி அணிந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹெம்லெட் இல்லாமல் பயணம் செய்த புகைப்படத்தை நடிகர் அமிதாப்பச்சன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோன்று அனுஷ்கா சர்மாவும் சமீபத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்த வீடியோக்கள் வைரலாகி இருந்தன.


இந்த வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்திருப்பது குறித்து மும்பை டிராபிக் போலீசாரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் மும்பை டிராபிக் போலீஸார் இருவரிடமும் அபராதம் வசூலித்துள்ளனர். அதாவது ஒரு இரு சக்கர வாகன ஓட்டியிடம் ரூ.10500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை தவறு செய்தவர் கட்டிவிட்டதாக மும்பை போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


அதேபோல் மற்றொரு இருசக்கர வாகன ஓட்டிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதுவும் கட்டப்பட்டுவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement