• Apr 19 2024

அம்மா ப்ரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்டு இருக்கிறாங்க- கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்- அடடே இவர் இப்போதானே வெளியேறினார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோக்களில் மிகவும் முக்கியமானது தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை ராக்கி சாவந்த் .

இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 மற்றும் சீசன் 14, சீசன் 15 போன்றவற்றுள் கலந்து கொண்டுள்ளார்.இவர் கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்தேஷ்ஷை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். பின் நிகழ்ச்சி முடிந்த சில மாதத்திலேயே, அவர் ஏமாற்றிவிட்டதாக கூறி கணவரை விட்டு பிரிந்தார்.


இதையடுத்து, ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாகவும் என் கடந்த காலத்தைப் பற்றியும் அவரிடம் எதையும் மறைக்காமல் கூறிவிட்டேன். ஆதில் கான் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இனி காதலன் ஆதிலுக்காக, முழுசா கவர் பண்ணும் ஆடைகளைமட்டுமேன அணிவேன் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த ராக்கி சாவந்த் டாப் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்ட ராக்கி சாவந்த், 9 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.


ஜனவரி 8ந் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ராக்கி சாவந்த், கதறி அழுதபடி ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், என் அம்மா ப்ரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அம்மா குணமடைய அனைவரும் எனக்காக தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று கதறி அழுதபடி வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோவைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement