• Apr 20 2024

Misbehave பண்ணவன் கூடவே ஆறு மாசமா பேச்சு..சம்யுக்தா விஷயத்தில் விஷ்ணுகாந்த் எடுத்த அதிரடி முடிவு..!

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனையில் விஷ்ணுகாந்த் தன்னுடைய இறுதி முடிவு பற்றி தெரிவித்து உள்ளார்.சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது அதற்கு முன்பு காதலித்த நபர் உடன் பேசிய எவிடன்ஸ் ஆடியோ ஒன்றை விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார்.இந்த நிலையில் என்னால் இனி சம்யுக்தா உடன் வாழ முடியாது என்று விஷ்ணுகாந்த் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து அந்த சீரியலில் நடிக்கும் போது காதலித்து பின்னர் திருமணமும் செய்து கொண்ட விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனை சோசியில் மீடியாவில்  சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவருமே மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு தங்களுடைய பிரச்சனையை மேலும் பெரிதாக்கி கொண்டிருந்த நிலையில் என் மீது எந்த தவறும் இல்லை என்று விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நபரோடு பேசிக் கொண்டிருந்த ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுகாந்த் தான் என்று மாலை 6 மணிக்கு லைவில் வருகிறேன் என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே சம்யுக்தா லைவில் வந்து என்னை பற்றி வீடியோ ஆடியோ வைத்திருப்பதாக என்னுடைய உறவுக்காரர்களுக்கு போன் போட்டு விஷ்ணுகாந்த் மிரட்டுகிறார். அப்படி ஏதாவது ஆடியோ வீடியோ வெளியிட்டால் இனி நடக்கிறதே வேற அப்படி வெளியிட்டு பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும் என்று மிரட்டும் தோணியில் பேசி இருந்தார்.

அதைத்தொடர்ந்து அன்று மாலை 6:00 மணிக்கு லைவில் வந்த விஷ்ணுகாந்த் நான் சம்யுக்தாவின் சித்தியிடம் பேசினேன். ஆனால் ஆடியோவை வெளியிடுவேன் என்று கூறவில்லை. என்னிடம் ஆடியோ இருக்கிறது அதை எல்லாம் கேட்டு நான் அழுது இருக்கிறேன். சம்யுக்தா என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கூட இன்னொரு நபரிடம் பேசிக் இருக்கிறார் என்று அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எனக்கு சில ஆதாரங்களை அனுப்பி இருக்கிறார்கள் என்று தான் நான் கூறினேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  மீண்டும் தொடர்ந்து இவர்கள் இருவருடைய பிரச்சனைகளும் மோதல்களும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கொண்டே இருந்த நிலையில் திடீரென்று தனியார் youtube சேனல் ஒன்றில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா ஒரு நபரிடம் பேசிய ஆடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ கிட்டத்தட்ட ஒரு அரை நேரமாக இருந்தது.

அத்தோடு  அந்த ஆடியோவில் நான் இந்த பிரச்சனையை மீடியாவிற்கு கொண்டு வர வேண்டாம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசி வரைக்கும் எங்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்துக்கலாம் என்று நான் அவ்வளவு ட்ரை பண்ணேன். அப்படித்தான் நான் காண்டாக்ட் பண்ணுனேன். ஆனால் மிரட்டுறாங்க, பிளாக் மெயில் பண்றாங்கன்னு பொய்யா என் மேல கேஸ் கொடுத்துட்டாங்க. என் மேல தவறா பல பழிகளை தூக்கி போட்டாங்க.

வெளியே போகும்போது கூட பலர் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க. அது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அதனாலதான் என் மேல தப்பு இல்லை என்கிறத நிரூபிக்க எனக்கு கிடைச்ச ஒரு ஆடியோவை நான் ரிலீஸ் பண்ணி இருக்கிறேன். இனிமேல் எனக்கும் சம்யுக்தாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதே மாதிரி எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு காரணமும் அவங்களாகத்தான் இருப்பாங்க என்று விஷ்ணுகாந்த் கூறியிருக்கிறார்

Advertisement

Advertisement

Advertisement