• Apr 18 2024

மீனாவின் அப்பாவிற்கு திடீரென ஏற்பட்ட விபத்து...கண்ணனை திட்டும் கதிர்...இன்றைய எபிசோாட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பியை மையமாகக் கொண்டு நகரும் சீரியலில்  இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடா என கதிரும் தனமும் பேசுகின்றார்.ஜீவாவை பற்றி நீ அப்படி பேசாதே..வேலைக்கு போயும் நீ திருந்தலையா என கண்ணனை திட்டுகின்றார் தனம்.

அதற்கு பின் ஜீவாவும் மீனாவும் தனியாக வந்து கவலைப்படுகின்றனர்.அப்பொழுது மீனாவின் தாய் மீனாவிற்கு போன் பண்ணுகின்றார்.உங்க வீட்டிற்கு வந்து பத்திரிகை வைத்ததும் வீட்டிற்கு வரும் போது அப்பாவிற்கு அக்சிடன்ற் ஆகிட்டு என்பதை அழுது கொண்டே கூறுகின்றார்.

பதறியடித்துக்கொண்டு மீனாவும் ஜீவாவும் செல்கின்றனர்.அப்பொழுது தனம் கயலை நான் பார்த்துக்கொள்கின்றேன் நீ முதல் கிழம்பு என கூறுகின்றார்.

அதன் பின் தந்தையை போய் பார்க்கின்றார் மீனா.எனக்கு தனியாக இருப்பது ஒரு மாதிரி இருக்கு...என்று கவலைப்பட்டு கூறுகின்றார் மீனாவின் தந்தை.

அதற்கு மூர்த்தியும் நீங்க ஒன்றிற்கும் கவலைப்படாதீங்க..கல்யாண வேலையை கூட இருந்தே ஜீவா பார்த்துக் கொள்ளுவான்.நாங்க எல்லோரும் இருக்கின்றோம் நீங்க எதுக்கும் பயப்படாதீங்க என ஆறுதல் கூறுகின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement

Advertisement