• Apr 26 2024

மூர்த்தியின் கையால் எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்க வைத்த மீனா- கண்ணனுக்கு காத்திருந்த இன்னுமொரு அதிர்ச்சி- மகிழ்ச்சியில் தனம்

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டடின் ஸ்டோர்ஸ். கதிர் வீட்டுக்கு வந்தும் முல்லை அழுகையை நிறுத்தாமல் அழுது கொணடே இருக்க ஜீவா சமாதானப்படுத்துகின்றார். பின்னர் எல்லோரும் சேர்ந்து ஆறுதல்ப்படுத்தி விட்டு உள்ளே செல்ல கண்ணன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

இதனால் தனம் கண்ணனை உள்ளே அழைக்க கண்ணன் கை எடுத்துக் கும்பிட்டு விட்டு கிளம்புகின்றார். பின்னர் வீட்டுக்குச் சென்ற கண்ணன் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழப்போறோம் என்று சொல்லி வந்தோம் ஆனால் கொஞ்ச நாளிலேயே இப்படி பண்ணிட்டோமே எவ்வளவு கடனை வாங்கி வச்சிருக்கிறேன். நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன் என தன்னைத் தானே திட்டுகின்றார்.


ஐஸ்வர்யா கண்ணனை ஆறுதல்ப்படுத்தவும் கண்ணன் தான் செய்த தவறு எல்லாவற்றையும் உணர்ந்து தன்னைத் தானே அடித்து கொள்கின்றார். பின்னர் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மீனா மூர்த்தியிடம் வீட்டில ஏதாவது பெரிய காரியம் நடந்தால் சாப்பாடு குழைச்சு தருவீங்களே அதை மறந்திட்டீங்களா என்று கேட்கின்றார்.

இதனால் மூர்த்தி எல்லோருக்கும் சாப்பாட்டைக் குழைததுக் கொடுக்க சாப்பாட்டை வாங்கி சாப்பிடும் ஜீவா கண் கலங்குகின்றார்.இதனால் ஜீவாவை மீனா கலாய்க்கின்றார். மீனா இப்பிடி மூர்த்தியின் கையால் எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்க வைத்ததை நினைத்து தனம் சந்தோஷப்படுகின்றார். பின்னர் ஜீவாவும் மீனாவும் தங்களுடைய வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர்.


தொடர்ந்து விடிந்ததும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் பேசிட்டு இருக்கும் போது அவரது சித்தி வந்து நிம்மதியாக இருக்கிறோம் என்று யோசிக்காதீங்க எப்போ என்னிடம் வாங்கிய பணத்தைக் கொடுப்பீங்க என்று கேட்கின்றார். இதனால் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement