• Apr 18 2024

திடீரென மூர்த்தி பற்றி பேசி ஐனார்த்தனை கடுப்பாக்கிய மீனா- கண்ணனின் பேச்சை கேட்காமல் இருக்கும் ஐஸ்வர்யா- குழப்பத்தில் ஜீவா

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம். மீனா ஜீவாவின் அப்பா ஜீவாவைத் திட்டியதற்காக அவருடை அப்பாவைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்.மூர்த்தி மாமா கூட ஜுவா கிட்ட கேட்டு தான் முடிவு எடுப்பான் நீங்க இப்பிடி பண்ணீட்டீங்களே அங்க நிம்மததி இல்லைனு இங்க வந்தால் இங்கையும் எங்களை திட்டிட்டு இருக்கிறீங்க என்று கூறுகின்றார்.

தொடர்ந்து தனம் ஐஸ்வர்யாவைப் பார்க்க வருகின்றார். பின்னர் கண்ணன் மூர்த்தி அண்ணனும் ஐஸ்வர்யாவை வந்து பார்த்திருக்கலாம் என்று சொல்ல கதிர் நாம என்ன தப்பு வேணும் என்றாலும் பண்ணுவோம். ஆனால் அண்ணன் மட்டும் இங்கி வரணுமா என கண்ணனுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். தொடர்ந்து ஐஸ்வர்யாவை ஜீவா வந்து பார்க்கின்றார்.


அப்போது தனம் காபி கொடுக்க குடிக்கும் போது ஐஸ்வர்யாவின் சித்தி அண்ணன் தம்பிக்குள்ள எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஒரு பிரச்சினை என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சேர்ந்திரும் என்பது உண்மை தான் போல என சொல்ல தனம் சந்தோஷப்படுகின்றார்.பின்னர் ஜீவா கிளம்பும் போது கதிர் தனியாக ஜீவாவிடம் சென்று நீ நல்லா இருக்கிறியா என்று கேட்க ஜீவா சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார்.

பின்னர் ஹாஸ்பிட்டலில் பணம் கட்ட வேணும் என்பதற்காக கண்ணன் வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து விட்டு வருவதாக கிளம்புகின்றார். வீட்டுக்குச் சென்று பணத்தை எல்லா இடமும் தேடி விட்டு பணம் இல்லாததால் ஐஸ்வர்யாவிடம் போன் பண்ணி நகையைக் கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா நகை தரமுடியாது கண்ணா ஏன் உங்க வீட்டில கட்ட மாட்டாங்களா எனக் கேட்கின்றார்.


அதற்கு கண்ணன் இல்ல ஐசு பணம் கட்டினா தான் வீட்டை போக முடியும் என்று சொல்லியும் ஐஸ்வர்யா நகையைக் கொடுக்க மறுக்கின்றார். கண்ணன் நீண்ட நேரமாகியும் வராமல் இருக்கிறதால கதிர் ஐஸ்வர்யாவிடம் சென்று விசாரிக்கிறார். அப்போது பணம் இல்லை என்ற விஷயத்தை அவருடைய சித்தி சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement