• Apr 23 2024

பிரபல நடிகரை காதலித்து விட்டு கழட்டி விட்ட மீனா...கடைசியில் இது தான் சம்பவமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகையின் காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறி ...அவர் யார்...என்ன நடந்தது என இந்த தொகுப்பில் பார்ப்போம் வாங்க..

1980 களில் குழந்தை நட்சத்திரமாகியவர் தான் நடிகை மீனா. இவர் இதனைத் தொடர்ந்து என் ராசாவின் மனசினிலே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். 90களில் ரஜினி, கமல், அஜித் ,பார்த்திபன் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் பின்னர் கதாநாயகியாகவும்  களமிறங்கினார்.தெலுங்கில் 1990 ஆம் ஆண்டு 'நவயுகம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகி  அவதாரம் எடுத்த மீனா, அதே ஆண்டு தமிழில் ஒரு புதிய கதை என்கிற படத்தில் கதாநாயகியாக  அறிமுகமானார்.



அழகு, அமைதி, திறமை என ஒரு சேர இருந்த நடிகை மீனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. ரஜினி - கமல் போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை தொடர்ந்து அவர்களுக்கே கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ரஜினி - மீனா காம்பினேஷனில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மீனா, அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்காத பிரபலங்களில் ஒருவர். அதே போல் திரையுலகில் உள்ள அனைவருக்குமே மிகவும் மரியாதை கொடுப்பவர் என கேள்வி பட்டிருப்போம். இவரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் சில நடிகர்கள் இவருக்கு வலைவிரித்த போதிலும், யாரிடமும் சிக்காமல் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொண்டார்



அத்தோடு இவர் ஒரு திருமணமான நடிகரை காதலித்து கழட்டி விட்டதாக 90-களில் தீயாக பரவிய கிசுகிசு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. மீனா நடிகர் பிரபு தேவாவுடன் இணைந்து, டபுல்ஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார். அப்போது பிரபு தேவா பேசுவது, பழகுவது, அவரின் மேனரிஸத்தை பார்த்து மயங்கிய மீனா, பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் காதலிக்க ஆரம்பித்துள்ளார்.



 காதல் இருவருக்கும் இடையே முத்தி போவதற்கு முன்பாக... மீனாவின் தோழிகள் சிலர், அவர் ஒரு பிளே பாய் அனைத்து நடிகர்களுடனும் இப்படி தான் பேசி பழகுவார் என ஒரு பிட்டை போட, சுதாரித்துக்கொண்ட மீனா அவரை நைசாக கழட்டி விட்டதாக சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement