• Apr 20 2024

கல்யாண வீட்டுக்கு வந்த தனது குடும்பத்தை கண்டுகொள்ளாமல் போன ஜுவா- தனத்திற்கு பதிலடி கொடுத்த மீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். கல்யாண வீட்டுக்கு முதலில் மாப்பிள்ளை வீட்டினர் வருகை தருகின்றனர்.மாப்பிள்ளை வீட்டாரிடம் ஜுவா மூத்த மருமகன் இல்லை மகன் மாதிரி என மீனாவின் அப்பா புகழ்கின்றார்.

தொடர்ந்து மூர்த்தியின் குடும்பத்தினர் அனைவரும் மீனா வீட்டுக்கு வருகின்றனர். இன்றைய தினம்புது ஐசாக விஜே தீபிகா இணைந்துள்ளார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுடனும் மீனாவின் அப்பாவுடனும் எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது ஜுவா வருகின்றார். இருப்பினும் யாரிடமும் சரியாகப் பேசாமல் அங்கிருந்து கிளம்புகின்றார்.


தொடர்ந்து தனம் மீனாவிடம் ஜுவா வருத்தப்பட்டானா, அவனை கவலைப்பட வேணாம் என்று சொல்லு இதைப் பற்றி வீட்டை பேசலாம் என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார். அதற்கு மீனாவும் நான் வீட்டில இருந்து பணம் கொண்டு வந்திருந்தா இ்்படி ஆகியிருக்காது என்று முகத்தடி கொடுக்கிறார். தொடர்ந்து எல்லோரும் காட்ஸ் கூட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜுவா விளையாட வந்திருந்ததும் மூர்த்தி எழும்ப பார்க்க அங்கு வரும் ஜனார்த்தனன் தனது நண்பரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்.


அப்போது ஜுவாவின் வேலையைக் கேட்டு அந்த நண்பன் அவமானப்டுத்த ஜுவா அ்கிருந்து கிளம்புகின்றார். பின்னர் மாமனாருடன் சேர்ந்து ஜுவா குடித்துக் கொண்டிருக்கும் போது இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. நாளைய எப்பிஷோட்டில் கதிர் வந்து ஜுவாவை குடிக்க வேணாம் என்று தடுக்க ஜுவா நீ யார் உங்க அண்ணன் மாதிரி நீயும் திட்டப் போறியா என்று கேட்கிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement