• Apr 19 2024

ஜீவா சீக்கிரமே இங்க வந்திடுவான் என மூர்த்தியிடம் போய் சொன்ன மீனா- கண்ணன் வீட்டுக்கு வந்து மிரட்டிய ஆபீஷர்ஸ்- ஜாலியாக இருக்கும் ஐஸ்வர்யா

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். ஐஸ்வர்யா கதிரிடம் பணம் வாங்கி வீடியோ செய்வதற்கு தேவையான பொருட்கள் வாங்குவோம் என ஐஸ் வைக்கின்றார்.

தொடர்ந்த விடிந்ததும் கயல் பாப்பா ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம்பிடிப்பதால் மீனா ஸ்கூலுக்கு கட்டாயம் போகணும் என்று சொல்கின்றார். தொடர்ந்து ஜீவாவும் கயல் ஸ்கூலுக்கு பொகலாமா என செல்லங் கொஞ்ச ஜனார்த்தனன் வந்து எதுக்கு போகணும் அது விளையாடட்டும் துாங்கட்டும் எதுக்கு குழந்தையை வற்புறுத்திறீங்க எனறு கூறி கயலை உள்ளே கூட்டிச் செல்ல சொல்கின்றார்.


தொடர்ந்து காணி விற்பது குறித்து ஜீவா சொன்ன ஐடியா தான் நல்லா இருக்கு என்று சொல்லி விட்டு இருந்தாலும் எதுக்கு அவ்வளவு கஷ்டப்படனும் என்று சொல்ல ஜீவா அந்த இடத்தை விட்டு எழும்பிச் செல்கின்றார். இதனால் கடுப்பான மீனா தகப்பனிடம் ஒரு நாள் ஜீவா அவங்க அண்ணன் வீட்டுக்கு ஓடத்தான் போறான். நீங்க ஓவராக பண்ணிட்டு இருக்கிறீங்க என திட்டுகின்றார்.

பின்னர் தனம் வீட்டுக்குச் செல்லும் மீனா தனத்துடன் பேசிட்டு இருக்கும் போது மூர்த்தி வந்து மீனாவிடம் நலம் விசாரித்ததோடு கயலை துாக்கி வைத்து கொஞ்சுகின்றார். மீனா வீட்டில் ஜீவா இங்க இந்த மாதிரி இல்லை இங்க தான் சந்தோஷமா இருந்தான். அங்க பொம்மை மாதிரி இருக்கிறான் என்று சொல்ல மூர்த்தி கவலைப்படுகின்றார்.


பின்னர் மூர்த்தி அங்கிருந்து கிளம்ப மீனா தனத்திடம் ஜீவா சீக்கிரமே இங்க வந்திருவான் பாருங்க அக்கா என்று சொல்ல தனம் சந்தோஷப்படுகின்றார். பின்னர் கண்ணன் வேலைக்கு கிளம்பி வெளியே வர கிரடிட் காசு கட்டவில்லை எப்போ கட்டுவீங்க என்று ஆபீஷர்ஸ் வந்து மிரட்டிட்டு போக கண்ணன் அதிர்ச்சியடைகின்றார். இருந்தாலும் ஐஸ்வர்யா இதைப் பற்றி கவலைப்படாமல் சேனலில் வீடியோ போடுவதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதைப் பற்றியே சொல்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement