• Apr 20 2024

குதிரை ஓட்டிய சிறுவனுக்கு பெரிய தொகைப் பணத்தை கொடுத்த மாரி செல்வராஜ்- நெகிழ்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு வெற்றி படமாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டையும் பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றி படமானது. 

மேலும் இந்த படத்தில் இவர் மனிதாபிமானத்தோடு நடந்து இருக்கிறார். அதாவது கர்ணன் படத்தில் குதிரை மேய்க்கும் ஒரு சிறுவன் படம் முழுக்க வருவான். அவன் கடைசி கிளைமாக்ஸ் இல் செய்யும் அந்த செயல் படத்தைப் பார்த்த அனைவரையும் ஈர்த்தது. அந்தப் சிறுவன் பெயர் தான் காளி. அவன் அந்தப் படத்திற்காக மூன்று மாதம் வேலை செய்திருக்கிறான்.


அதற்காக இயக்குநர் அவனுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் கொடுத்து இருக்கிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது ஏனென்றால் எந்த ஒரு இயக்குநரும் இந்த மாதிரி கதாபாத்திரத்திற்கு வெறும் 5ஆயிரம் அல்லது 10ஆயிரம் தான் கொடுப்பார்களாம். ஆனால் மாரி செல்வராஜ், மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த செயலை செய்து இருக்கிறார்.

அத்துடன் இவருடைய கேரக்டர் பொதுவாகவே அனைவரையும் உண்மையாகவே மதிக்கக் கூடியவர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு என்று பார்க்காமல் இந்த செயலை செய்தது, தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய மரியாதையை தேடி கொடுத்திருக்கிறது. மேலும் இவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக தயாரிப்பாளரும் எந்த கேள்வியும் கேட்காமல் சம்பளத்தை கொடுத்தது முக்கியமாக பாராட்டப்பட வேண்டியது.


இதனை அடுத்து மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி வருகிறார். மேலும் மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்து வருகிறார். 

Advertisement

Advertisement

Advertisement