• Apr 19 2024

மனோரமாவின் ஒரே ஒரு மகனா இவர்.. அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.. வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் "ஆச்சி" என அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் நடிகை மனோரமா. இவர் இந்தியத் திரைப்படத் துறையில் படைத்த சாதனைகளோ ஏராளம். ஆரம்பத்தில் ஒரு மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத்  தொடங்கியவர் தான் மனோரமா.


அதன் பின்னர் சினிமாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை கதாநாயகர்கள்  மற்றும்  இன்றைய தலைமுறை கதாநாயகர்களுடன் இணைந்து 1300  திரைப்படங்களுக்கு மேல் நடித்து  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்  திரையுலகை தன்னுடைய நடிப்பினால் ஆட்சி செய்தவர்.

இவ்வாறு சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வந்த மனோரமா ஆச்சியுடைய இழப்பு என்பது தமிழ் திரையுலகம் யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒரு இடம்  தான். இவர் குறிப்பாக பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் என்ற சாதனையையும் படைத்தவர்.


இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ராமநாதன் என்பவரை மனோரமா 1964-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, அதன் பின் ஒரு சில காரணங்களால் 1966-ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். இவர்களுக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார்.


அந்தவகையில் 'குடும்பம் ஒரு கதம்பம்' என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான பூபதி அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார், ஆனால் அவர் நடித்த படங்கள் பெரியளவிற்கு வெற்றி காணவில்லை. இதன் காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். அதனால் நிறைய சோதனைகளைகளையும் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.


அதாவது கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டதால் மது கிடைக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எல்லாம் பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மனோரமாவின் ஒரே ஒரு மகனான பூபதி இவ்வாறு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றமை பல ரசிகர்களையம் மன வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement