• Apr 25 2024

மண மேடையில் வைச்சுக் கூடி அப்படித்தான் செய்தாங்க... மன வருத்தத்தில் மஞ்சிமா மோகன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கவுதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் 'கடல்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து 'இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.


இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. மஞ்சிமா மோகன் 'அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். 


மேலும் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் "தேவராட்டம்" என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இக்காதலை சமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 


பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 28ம் தேதி நெருங்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் சூழ கோலாகலமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.


மஞ்சிமா மோகன் சற்று உடல் எடை அதிகமாக இருப்பவர். இதனால் பல நெட்டிசன்கள் அவர் படங்களில் நடித்த போதும், போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட போதும் அவரது பதிவுக்கு கீழ் சென்று பாடி ஷேமிங் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது மணமேடையில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்கும் போது கூட மஞ்சிமா மோகனை சிலர் உருவ கேலி செய்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டதாக தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் "தனது உடல் எடை தனக்கு எந்த வகையிலும் பாரமாக இல்லை என்றும், கேலி, கிண்டல் செய்பவர்களுக்காக ஒரு போதும் எனது இயல்பை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

ஆனால், ஒரு வேளை தொழில் ரீதியாக உடல் எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் தனது உடல் எடையை தாராளமாக குறைக்க முயற்சி செய்வேன்" எனகே கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement