பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்களுக்கிடையில் கடும் மோதல் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகின்றது.
இந்த பொம்மை டாஸ்கில் மணிகண்டன் எல்லை மீறிய பேச்சுக்களை பேசி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் அடுக்கி உள்ளனர்.ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்ற அடையாளத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால் இவர் செம டஃப் கொடுப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் அவர் சுமாராகவே விளையாடி வருகின்றார்.இந்நிலையில், 24 மணி நேரம் நிகழ்ச்சியில் எந்தவொரு எடிட்டும் செய்யப்படாமல் வெளியான வீடியோவில் மணிகண்டன் பச்சை பச்சையாய் பீப் வார்த்தைகளை பேசும் வீடியோக்களை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
பொம்மை டாஸ்க்கில் அடிக்கடி மணிகண்டன் கெட்டவார்த்தை பயன்படுத்தியதாக வீடியோ வெளியிட்டு பிக் பாஸ் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். ஓடிடியில் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருப்பதால் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் கெட்ட வார்த்தைகள் சகஜமாக ஒளிபரப்பாகி வருகின்றன என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!