• Mar 29 2024

லியோ படத்திலிருந்து வெளியாகிய மேக்கிங் வீடியோ - யப்பா எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறாங்க -

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இதில் மிஷ்கின், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து அவர்கள் சென்னை திரும்பியிருக்கின்றனர்.

காஷ்மீருக்கு லியோ படக்குழு சென்று ஏறத்தாழ இரண்டு மாதங்கள் முடிந்த சூழலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அவர் சில வாரங்களுக்கு முன்னதாக லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவரை விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.


படத்தில் நடிப்பவர்களில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோருக்கான ஷூட்டிங் மட்டும் காஷ்மீரில் நடந்துவந்ததாகவும் இந்த வாரத்துக்குள் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்துவிடும் என்றும் தகவல் வெளியானது., அதன்படி லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் இன்றுடன் முடிவடைந்திருக்கிறது. இதனையொட்டி படக்குழு சார்பில்ச் சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சுமார் ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஒட்டுமொத்த படக்குழுவும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், காஷ்மீரில் இறங்கிய முதல் நாளிலிருந்து கடைசிநாள் வரை இருந்த அனுபவத்தை பலரும் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் இருப்பவர்கள், லைட் மேன்கள் பணியாற்றும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யப்பா இவ்வளவு கஷ்டப்படுறாங்களே. அவர்களை முதல்முதலில் ப்ரோமோவில் பயன்படுத்திய லோகேஷுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.


படக்குழு சென்னைக்கு எப்போது திரும்பப்போகிறது என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் சென்னை திரும்பியவுடன் சிறிது ரெஸ்ட் எடுத்த பிறகு சென்னையில் ஒருவாரம் படத்தை ஷூட் செய்துவிட்டு படத்தின் க்ளைமேக்ஸை ஷூட்டிங் செய்வதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறதாம் படக்குழு.

முன்னதாக, காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது லியோ படக்குழு அங்குதான் இருந்தது. அதுதொடர்பாக படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், சந்திரமுகி படத்தில் அரண்மனைக்குள் வடிவேலு செல்லும்போது பொருள்கள் உடையும் காட்சியை பகிர்ந்து, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் நண்பா என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement