• Apr 16 2024

மறைந்த தந்தையின் திருவுருவ படத்துக்கு மகேஷ் பாபு அஞ்சலி!-மூன்றாம் நாள் காரியம்..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் இதுவரை 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் கிருஷ்ணா.நடிகர் மட்டுமல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.மேலும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் அப்பாவாக இருக்கும் இவர் நேற்று முன்தினம் காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.


இவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.பல சினிமா பிரபலங்கள் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் நேற்று மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மூன்றாம் நாள் காரியம் நடைபெற்றது. இதில் மகேஷ் பாபு, மகேஷ் பாபு மனைவி நம்ரதா, மகேஷ் பாபுவின் மறைந்த அண்ணன் ரமேஷ் பாபு குடும்பத்தினர் மற்றும் மகேஷ் பாபுவின் சகோதரிகள் கலந்து கொண்டனர்


இந்நிகழ்வில் இருந்து மகேஷ் பாபுவின்  புகைப்படங்கள் வெளியாகின. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகேஷ் பாபுவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement