தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ்பாவு. இவர் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு தனது இயல்பான நடிப்பினால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்.
மேலும் தமிழில் ஸ்பைடர் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ஏ. ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழிலும் சிறந்த அங்கீகாரம் கிடைத்தது.
இவர் ஆந்திரவாவைச் சேர்ந்த பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக அறியப்பட்டாலும், சென்னையில்தான் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.இவர் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், ஆடை நிறுவனமும், தியேட்டர்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையி, தற்போது, தன் மனைவி நர்மதா பெயரில் அவர் ஓட்டல் தொழில் களமிறங்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.அதன்படி, ஐதராபாத் நகரில் பல வசதிகளுடன் 2 நட்சத்திர ஓட்டகள் கட்ட திட்டமிட்டுள்ள மகேஷ்பாபு, மேலும், பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் ஒரு ஹோட்டல் உருவாகவுள்ளது.
மேலும், இந்தியாவில் முக்கிய நகரங்களிலும் இந்த ஓட்டல்களை அவர் நிறுவ உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இவர் நடிப்பில் தற்பொழுது 'மகேஸ்பாபு28' உருவாகி வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
Listen News!