• Apr 20 2024

மகாலக்ஷ்மியின் அந்த இடத்தில் போடப்பட்ட டாட்டூ-யாருடைய பெயர் தெரியுமா..வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகை மாகலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரரை திருமணம் செய்ததில் இருந்து அவரை பற்றிய ஒவ்வொரு தகவலும் வெளியாகி ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.அந்த வகையில் தற்போது அவரின் டாட்டூ பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்த நடிகை மகாலக்ஷ்மி சமீபத்தில் லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளரான ரவீந்தரை  இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் தயாரிப்பில் விடும் வரை காற்று என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததுள்ளதாம்.

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதுவரை தங்களின் காதலை  வெளியிடமால் ரகசியமாக வைத்திருந்த இருவரும் கடந்த முதலாம்  தேதி திருப்பதியில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே விவாகரத்தான இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்தான் என கூறப்படுகின்றது.



மகாலக்ஷ்மியின் முதல் கணவர் அனில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலக்ஷ்மியும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இடையில் டிவி நடிகர் ஒருவருடனும் மகாலக்ஷ்மி காதல் உறவில் இருந்ததாக தகவல்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை மகாலக்ஷ்மி கையில் வரைந்துள்ள டாட்டூ வைரலாகி வருகிறது. நடிகை மகாலக்ஷ்மி தனது இடது கையில் சச்சின் என்ற பெயரை டாட்டூவாக போட்டுள்ளார். சச்சின்  வேறயாரும் இல்லை மகாலக்ஷ்மியின் மகன் ஆவார்.



கணவரை பிரிந்த பின்னர் மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மகாலக்ஷ்மி சமீபத்தில் தான் ரவீந்தரை தனது மகனின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மகாலக்ஷ்மியின் மகன் சச்சின் தன்னிடம் ரொம்பவே பாசத்துடன் ஒட்டிக்கொண்டதாக கூறி வருகிறார் ரவீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement