• Apr 26 2024

விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறாரா மாகாபா ஆனந்த்..?- ரசிகர்கள் அதிர்ச்சி

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்குமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும். அவ்வாறு பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் 'சூப்பர் சிங்கர்'. இந்த சீசனானது 8சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 9வது சீசன் நடைப்பெற்று வருகிறது.


இந்த நிகழ்ச்சியானது பல பின்னணி பாடகர், பாடகிகளிற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்திருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஒன்றாக இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். 


காமெடி கலந்த பாணியில் இவர்கள் இந்நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் பலருக்கும் பிடித்துப் போயுள்ளது. இவர்கள் இருவருக்காகவும் என்றே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.


இந்நிலையில், திடீரென என்ன நடந்தது என்று தெரியவில்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடுத்து வரும் எபிசோட்டை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது இவருக்குப் பதிலாக ஒரே ஒரு எபிசோட்டை மட்டும் ரியோ ராஜ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கவுடன் இணைந்து தொகுத்து வழங்க போகிறாராம்.


இதனைத் தொடர்ந்து, ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் மாகாபா வரமாட்டார் என்ற செய்தி ரசிகர்களின் காதுக்கு இனி அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே வரமாட்டார், அதிலிருந்து விலகி விட்டார் என்பது போல் போய் சேர்ந்துவிட்டது. இதனால் இனிமேல் மா.கா.பா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரோ என்ற கவலையில் இப்போதும் பல ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement