• Apr 16 2024

நிறைய நல்ல துவக்கங்கள் இந்த புதிய மாதத்தில்....திருவண்ணாமலையில் வலம் வரும் ரம்யா பாண்டியனின் சகோதரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது கண்ணகி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டு கவனம் ஈர்த்தார்.

அந்த அறிக்கையில் "ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்மப் பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுது இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சற்று உடலைப் பெருக்குவதற்காக அதிகமாக உணவுகளை உட்கொண்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை தனக்காக செய்ததாகவும், மற்றவர்கள் முன்னிறுத்தும் பாதுகாப்பின்மையை திருப்திப்படுத்த அல்ல என்றும் கூறினார்.

"நான் முன்பு என்னை நேசித்ததைப் போலவே இப்போது என்னையும் நேசிக்கிறேன், எந்த வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் என்னை நேசிப்பேன்". என கீர்த்திப்பாண்டியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி பாண்டியன் திகழ்கிறார். அவ்வப்போது போட்டோ ஷூட், திருநெல்வேலி பண்ணையில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நிறைய நல்ல துவக்கங்கள் இந்த புதிய மாதத்தில்.. நிறைவான அன்பும் நன்றியும்" என கூறி புகைப்படத்தை கீர்த்தி பாண்டியன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement