பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் அசல் கோளாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.முதல் வாரத்தில் அமைதியாக இருந்த இவர், பின்னர் படிப்படியாக சேட்டைகளை செய்ய ஆரம்பித்தார்.
முதலில் குயின்சியிடம் தனது சில்மிஷ வேலைகளை காட்ட ஆரம்பித்தார்.ஆனால் குயின்சி இதனைக் கண்டு கொள்ளாத காரணத்தால் ஜனனி மற்றும் மகேஷ்வரியிடம் தனது சில்மிஷ வேலைகளைக் காட்டி வந்தார். தொடர்ந்து நிவாசினியிடம் காதலிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இருவரும் ஜோடியாக சுற்றித் திரிந்தனர்.அத்தோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சில விதி மீறல்களையும் செய்தார்கள். இதனால் பிக்பாஸ் இவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்றைய தினம் வீட்டிலிருந்து வெளியேற்றப்ப்பட்டார்.
இந்த நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல முதல் பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லிக் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!