• Mar 28 2024

என்னது லோகேஷ் கனகராஜ்ஜிற்கு குழந்தைகள் இருக்கா..? அதுவும் காதல் கல்யாணமாம்.. அட இது தெரியாமல் போச்சே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை சந்தித்து வருகின்ற ஒரு முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தனது திரைப் பயணத்தை தன்னுடைய நண்பருடன் இணைந்து 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் 'களம்' என்ற படத்தின் மூலம் தான் தொடங்கினார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். 


இவரின் திரைப்பயணம் குறித்த தகவல் பொதுவாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இவரது தனிப்பட்ட வாழ்கை பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கின்றது. அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் கடந்த 2012ஆம் ஆண்டும் தான் நீண்டநாள் காதலித்த வந்த ஐஸ்வர்யா லோகேஷை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது அத்விகா லோகேஷ் மற்றும் ஆருத்ரா லோகேஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தனது குடும்ப வாழ்க்கை குறித்துப் பல விடயங்களை பகிரமத்திருக்கின்றார். அதில் அவர் கூறுகையில் "நான் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டேன். அதன் பின்பு தான் சினிமாவுக்கும் வந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வுதான் நான் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணம். 

நான் வேலையை விடும்போது, என்னுடைய மனைவியும் வேலையில் இல்லை. கல்யாணமான தொடக்கத்தில் மாதம் 70 ஆயிரம் என நானும் என் மனைவியும் சம்பாதித்தோம், குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து நான் மட்டுமே வேலைக்குச் சென்றேன். திரைப்பட வாய்ப்புக் கிடைத்த பின் நான் அந்த வேலையை விட்டுவிட்டேன். இதனால் மாத வருவாய் ஒன்றும் எம்மிடம் இல்லை.


இதனைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒரு முடிவு எடுத்தோம். அதாவது "எனக்கு இரண்டாவது படம் கிடைக்கும் வரை நீ வேலைக்குப் போ. அது வரைக்கும் எனக்குப் பெரிய வருவாய் இருக்காது" என்றேன். குழந்தைக்கு ஏழு மாதம் இருக்கும் போதே என் மனைவி வேறொரு வங்கியில் பணியில் சேர்ந்தார். ஆனால் நான் சினிமாவில் இருந்தேன். 

இவ்வாறாக சுமார் இரண்டரை வருடம் அவர் வேலைக்குச் சென்றார். 'மாநகரம்' படத்தினை முடித்த பின்பு அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு அடுத்த படமும் கையெழுத்திட்டேன். அடுத்த ஒரு வாரத்திலேயே என் மனைவியை வேலையை விடச் செய்தேன். இந்தப் புரிதல்தான் என்னைச் சினிமாவில் இத்தனை காலமும் நிலை நிறுத்தியது" எனக் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Advertisement

Advertisement

Advertisement