• Mar 28 2024

வாழ்க்கை ஒரு முறை தான் நம்மை புறக்கணிப்பவர்களுக்காக வாழக்கூடாது- நெக்கட்டிவ் விமர்சனங்களுக்கு வனிதா கொடுத்த பதிலடி

stella / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா பற்றிய தகவல்கள் ஒரு பக்கம் தீயாக பரவி வந்த நிலையில், மற்றொரு புறம் சமூக வலைதளத்தையே ஸ்தம்பிக்க வைத்தது நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலின் மூன்றாவது திருமண பஞ்சாயத்து. இவர்கள் இருவருடைய திருமணத்திற்கு... ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கண்டமேனிக்கு வனிதா மற்றும் பீட்டர் பாலை வச்சு செய்தனர்.

இந்த பிரச்சனைக்கெல்லாம் முக்கிய காரணம் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவி எலிசபேத்தை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாது திருமணம் செய்து கொண்டது தான். இது குறித்து எலிசபேத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இந்த சம்பவம் மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்பட்டது. 


பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ள பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், மிகவும் எளிமையான முறையில்... பீட்டர் பால் குடும்ப வழக்க படி, கிருஸ்தவ முறைப்படம், பைபிள்,வாசித்து  மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்காதது துரதிஷ்டவசம் தான். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, பிரிந்தனர்.

இந்நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல் நலமின்றி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீர் என அவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து பலரும் அவருக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் வனிதாவும் தனது இரங்கலை தெரிவித்திருந்தார். மேலும் வனிதா கணவன் இறந்த பின்னரும் ஜாலியாக இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றது. இதனால் வனிதா தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கூறியதாவது எதிர்மறை மற்றும் பயனற்ற எதிர்மறை நபர்களை புறக்கணிக்கவும்... வாழ்க்கை ஒரு முறை தான், அதை நம் அன்புக்குரியவர்களுக்காக வாழ்வது நம் கையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement