• Apr 20 2024

விஜயகாந்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட மறைந்த நடிகை சௌந்தர்யா..! காரணம் இது தானா?

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்று தவசி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் மறைந்த நடிகை சௌந்தர்யா.

இவர் முதன் முதலில் இப்படத்தில் நடிக்க பயந்தாராம். அதற்கு காரணம் விஜயகாந்த் பற்றி சிலர் அவரிடம் தவறான விஷயங்களை கூறியது தானாம்.

விஜயகாந்த் மிகவும் கோபமானவர் என்றும், சில நேரங்களில் கோபம் வந்தால் அடித்துவிடுவார் என்றும் சௌந்தர்யாவிடம் தவறுதலாக கூறியுள்ளனர்.

இதனால் தான் பயந்தாராம். இதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் சௌந்தர்யா மூன்று நாட்கள் படப்பிடிப்பில் சும்மா வந்து இருக்க சொல்லி கூறியுள்ளார். அந்த மூன்று நாட்களில் சௌந்தர்யா இல்லாத காட்சியை மட்டும் எடுத்துள்ளார்களாம். 

அதுமட்டுமில்லாமல் அந்த மூன்று நாட்களில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதையும் சௌந்தர்யா புரிந்து கொண்டாராம். அதன்பின், விஜயகாந்திடம் மன்னிப்பும் நடிகை சௌந்தர்யா மன்னிப்பு கேட்டாராம்.


Advertisement

Advertisement

Advertisement