• Apr 20 2024

லட்சுமி கொடுத்த டுவிஸ்ட்.. பாரதி எடுத்த அதிர்ச்சி முடிவு – பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்

ஸ்கூலில் ஹேமா பாரதியிடம் கோபமாக பேசிவிட்டு செல்ல அப்போ நமக்கு குழு கொடுத்தது யார் என யோசித்துக் கொண்டிருக்க டாக்டர் அப்பா என லட்சுமி குரல் கொடுத்து கிளாஸ் ரூமில் இருந்து வெளியே வருகிறாள்.

உங்களுக்கு லொகேஷன் அனுப்புனது, ஐ லவ் யூ அப்பானு பேப்பர்ல எழுதி தூக்கி போட்டது சாப்பாடு வச்சது எல்லாமே நான் தான். ஆனா உங்களுக்கு என் ஞாபகம் வரவே இல்ல ஏன் இத லட்சுமி பண்ணியிருக்க மாட்டாளான்னு நீங்க யோசிக்கக்கூட இல்ல. என் மேல உங்களுக்கு பாசமே இல்லையா என கேட்கிறார்.

அத்தோடு ஹேமா உங்க கூடவே இருந்ததுனால அவ உங்களை மிஸ் பண்ணல, அவளுக்கு அவ தேடின அம்மா கிடைச்சுட்டாங்க ஆனா எனக்கு நான் தேடுன அப்பா இன்னும்  எனக்கு கிடைக்கல. நான்தான் அம்மாகிட்ட இந்த ஊரை விட்டு போயிடலாம்னு சொன்னேன் ஆனா சென்னையில் இருந்து கிளம்பி வந்ததும் தான் உங்களை ரொம்ப மிஸ் பண்ண என கூறி அழுகிறார்.

பாரதி நான் செஞ்சது தப்புதான் என லட்சுமி கிட்ட மன்னிப்பு கேட்க உங்ககிட்ட ஒண்ணு இருக்கு மட்டும் பர்மிஷன் கிடைக்குமா என கேட்க பாரதி என்ன சொல்லு என கேட்கிறார்.அத்தோடு  உங்கள ஒரே முறை அப்பான்னு கூப்பிடட்டுமா என கேட்க நான் அதுக்காகத்தான் ஏங்கிகிட்டு இருக்கேன் என பாரதி கூற லட்சுமி அப்பா என கூப்பிட்டு கட்டிக் கொள்கிறார்.


அடுத்து வெண்பாவை கோர்ட்டில் நிறுத்தி எப்ப பார்த்தாலும் கண்ணம்மா கண்ணம்மா என சொல்லி எல்லோரையும் அடிப்பதாக குற்றம் சாட்ட நீதிபதியும் வெண்பா கண்ணுக்கு கண்ணம்மா போல தெரிய அவரையும் அடிக்கப் பாய்கிறார். இதுதான் அவருடைய நிலைமை இதை கருத்தில் கொண்டு மருத்துவர் சிகிச்சைக்காக அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வெண்பா தரப்பு நீதிபதி வாதாட அரசு தரப்பு மருத்துவர் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் சமிட் பண்ணுங்க என உத்தரவிடுகிறார்.


அதன் பின்னர் பாரதி இந்த ஊர் மக்கள் மனச மாத்த அவர்கள் பல வருஷங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையை அரசாங்கத்தினை கட்ட வைக்க வேண்டும். அதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்து உண்ணாவிரதத்தில் உட்கார ஊர்மக்கள் நாங்க இத்தன வருஷமா கேட்டுகிட்டு இருக்கோம். நாங்க கேட்டு கிடைக்காதது நீ கேட்டு கிடைக்கப் போகுதா நாளைக்கு காலையில நீ இந்த ஊரை விட்டு போய்விடும் என கூறிவிட்டு கலைந்து செல்கின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.




Advertisement

Advertisement

Advertisement