• Mar 29 2024

பாரதிக்கு கண்ணம்மா கொடுத்த முகத்தடி- எங்களுக்கு அம்மாவே போதும் என்று கிளம்பிய லக்ஷ்மி மற்றும் ஹேமா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கம் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இன்றைய தினம் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது எனறு பார்ப்போம்.

அதாவது கண்ணம்மா அன்று கேட்ட போது என் என்கூட வாழ சம்மதிக்கல என்று கேட்கும் போது அன்று டிஎன்ஏ ரெஸ்ட் ரிபோர்ட் கிடைக்கல என்று சொல்ல. ஆக ஒரு பேப்பர் வரட்டும் அதை வச்சு முடிவு பண்ணியிருக்கலாம் என்று இருந்திருக்கிறீங்க. இந்த பேப்பர்ல இருக்கிறத வச்சு எப்படி நம்புறீங்க. வெண்பா மாதிரி இதையும் யாரும் மாற்றி வச்சிருப்பாங்க தானே என்லாரும் பதில் சொல்லுங்க என்று கேட்கிறார்.


மேலும் அப்பா பிள்ளைகள் உறவு என்பது பேப்பரை வச்சு வாறதில்ல நம்பிக்கை கண்டிப்பாக வேணும் அது ஒரு உணர்வு. அது தானாக வரணும் உங்களை குண்டு வெடிப்பில இருந்து காப்பாத்தினல்ல அன்று என் மேல நம்பிக்கை வந்திருக்கலாம்ல எதுவுமே இல்லாம பேப்பரை வச்சு சேர்ந்து வாழலாம் என்று சொல்லுற என்ன மனுஷன்யா நீ என்று பேசுகின்றார்.

அத்தோடு இதை என்னால ஏற்று கொள்ள முடியாது என்று சொல்ல சௌந்தர்யா வேணு எல்லோரும் அட்வைஸ்ட் பண்ணுகின்றார்கள்.ஆனால் கண்ணம்மா அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை இருந்தாலும் திரும்ப திரும்ப பாரதி மன்னிப்புக் கேட்கிறார். அத்தோடு குழந்தைகளை பிரிச்சு கூட்டிட்டு போகமாட்டேன். யார் கூட இருக்கணும் என்று நினைக்கிறது அவங்க விருப்பம் என்று கண்ணம்மா கூறுகின்றார்.

இதற்கு ஹேமா மற்றும் லக்ஷ்மி நாங்க அம்மா கூடவே இருக்கிறோம் நீங்க யாரும் வேணாம். அம்மாவை பற்றி யாரும் என்ன சொன்னாலும் நம்புவீங்களா வெண்பா அம்மாவை பற்றி தப்பா பேசினதுக்கு மண்டைய உடைச்சேன். உங்களுக்கு அந்த கோபம் வரலையா என ஹேமா அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.


அதே போல லக்ஷ்மியும் அம்மா கூடவே போகின்றேன் என்று கூறும்போது கண்ணம்மா பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டே போகின்றார். போறதுக்கு முன்னாடி பாரதியிடம் என்னோட உலகம் மட்டும் நீங்க தான் நீங்க என்னை வீட்டை விட்டு அனுப்பினதால தான் வீட்டை விட்டு வெளிய வந்து என்னோட உலகத்தை பார்த்தேன்.உங்களால தான் நான் தைரியமாக இருக்கிறேன் ரொம்ப நன்றி என்று கூறி அந்த இடத்தை விட்டு போகின்றார். அத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement