• Apr 20 2024

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மக்களிடம் ரீச் ஆனார்.

இருப்பினும் சிம்பு மற்றும் பிரபுவோவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதால் நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகியதோடு தற்பொழுது மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.


அதன்பின் சிறிய இடைவேளைக்கு பிறகு ராஜா ராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் என மிகச்சிறந்த படங்களில் நடித்து அசத்தினார். கடைசியாக கனெக்ட் என்ற திரைப்படம் அவரது நடிப்பில் வெளியாகி இருந்தது.அத்தோடு கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது.


தொடர்ந்தும் படங்களில் நடித்து வரும் இவர் புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்துள்ளனர்.இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் நயன்தாராவுக்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement