• Apr 24 2024

குஷ்பூவிற்கு வீட்டில் பாலியல் தொல்லை.. அவரே பகிர்ந்த பரபரப்புத் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 90களில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் 'தி வுமன்' நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடன் ஒரு உரையாடலில் குஷ்பு தனது குடும்பம் தொடர்பான ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். அதாவது அதில் அவர் "8 வயதிலேயே எனது தந்தையால் நான் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும், துன்புறுத்தப்பட்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்," ஒரு குழந்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அது அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக ஆறாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஆணோ, பெண்ணோ என்பதில் எந்த சிக்கலும் கிடையாது.

எனது அம்மாவிற்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை அமைந்தது. எங்களுக்கு மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவன் அமைந்தார். தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை தன்னுடைய பிறப்புரிமை போல் அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.


எனக்கு எட்டு வயதாகும் போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். அவருக்கு எதிராக துணிச்சலுடன் நான் பேசும் போது எனக்கு 15 வயதாகும். எனக்காக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இருப்பினும் ஒருவேளை நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. அதன் காரணமாகவே நான் பல ஆண்டுகள் அமைதி காத்து வந்தேன். இதை நான் கூறினால் எனது அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்ற அச்சமும் அந்த சமயத்தில் எனக்குள் இருந்தது" எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.


மேலும் "கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே எனது அம்மா வாழ்ந்து வந்தார். இனியும் தாங்க முடியாது என்று எனது 15 வயதில் முடிவு செய்த நான் அவருக்கு எதிராக பேசத் தொடங்கினேன். எனக்கு 16 வயது கூட இருக்காது அவர் எங்களை விட்டு பிரிந்து சென்றார். அடுத்த வேளை உணவுக்கு நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருந்தோம்.

இவ்வாறு எனது வாழ்வில் குழந்தை பருவமானது பல பிரச்னைகளை கொண்டது. ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது" எனவும் தெரிவித்தார்.


 நடிகை குஷ்புவின் இந்த பேச்சு திரையுலகில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement