• Apr 25 2024

குடித்து விட்டு பிரபல நடிகருடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.. கையில் சரக்கு பாட்டிலுடன் வெளிவந்த புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷ்-நானி நடிப்பில் தற்போது 'தசரா' படம் உருவாகி உள்ளது. இப்படமானது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியாக இருக்கின்றது. மேலும் இப்படமானது இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகின்றது.


அந்தவகையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதனால் அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி இருவரும் சேர்ந்து இன்று உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்வதற்காக மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.


மேலும் இந்நிகழ்வில் நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் தசரா பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை வாயில் வைத்து கல்பாக அடிக்கும் படியான காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். அதைப்போலவே இந்த புரமோஷன் நிகழ்விலும் அச்சு அசலாக செய்து காட்டியுள்ளார் நானி.


அந்த சமயத்தில் அங்கு சரக்கு பாட்டில் உடன் வந்த கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே சரக்கு பாட்டிலை எடுத்து குடித்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் ஷாக் ஆகினர். இருப்பினும் சிறிது நேரத்தின் பின்னர் தான் அந்த பாட்டிலில் மது இல்லை வெறும் குளிர் பானம் தான் இருந்தது என அனைவருக்கும் தெரிந்தது.


மேலும் இந்த விழாவில் தூம் தாம் பாடலுக்கு நானியும் கீர்த்தி சுரேஷும் நடனமும் ஆடினர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement

Advertisement