• Apr 25 2024

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருங்கள்- ரச்சிதாவுக்கு ரொம்ப பிடித்தது இவரைத் தானா?- கணவர் வெளியிட்ட புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 9 பேர் மாத்திரமே உள்ளனர். மேலும் இந்த சீசனை யார் ஆரம்பிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

அதன்படி இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகின்றது. இதனால் ஹவுஸ்மேட்ஸின் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இன்று காலையில் ஆரம்பத்தில் மைனா நந்தினியின் குழந்தை மற்றும் கணவர், தம்பி என மூவர் உள்ளே வந்திருந்தனர். முதல் பிரமோவில் குடும்பத்தினர் அனைவருடைய வருகையும் காட்டப்பட்டது.

 ஆனால் ரச்சிதாவின் குடும்பத்தில் யார் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். காரணம் ரச்சிதா அவருடைய கணவர் தினேஷ் கார்த்திக்கை பிரிந்து இருக்கும் நிலையில் அவருடைய கணவர் அவருக்காக அதிகமாக சமூக வலைதளத்தில் சப்போர்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார்.


தினேஷ் செய்து கொண்டிருக்கும் வேலைகள் உள்ளே இருக்கும் ரச்சிதாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் உள்ளே தினேஷ் சென்றதும் ரச்சிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் அதை ஏற்றுக் கொள்வாரா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். 

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ரச்சிதா ஆசையாக வளர்த்து வரும் பூனைக்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் உங்களிடம் எதுவும் சொல்ல முடியாத போது, நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். 


இந்த வாரம் ரச்சிதா நாமினேஷன் லிஸ்டில் இல்லாமல் இருந்தாலும் ரச்சிதாவை சக போட்டியாளர்கள் எல்லோ கார்டு கொடுத்து இருந்தனர் அதை குறித்து தினேஷ் இப்படி கூறுகிறாரா? அல்லது ரச்சிதாவிடம் எந்த ரகசியத்தையும் யாரும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும்போது ரச்சிதா மட்டும் அவருடைய மனதில் இருப்பதை பேச வேண்டும் என்று சக போட்டியாளர்கள் நினைப்பதை குறித்து இவர் எப்படி பேசி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

.






Advertisement

Advertisement

Advertisement