• Apr 24 2024

இலங்கைக்கு சென்றுள்ள கயல் சீரியல் பிரபலம்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் அறிமுகமாகின்ற நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபல்யமாகின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் அறிமுகமாகின்ற நடிகர் நடிகைகளும் வெகு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.

இந்தவகையில் தமிழ் சின்னத்திரையை பொறுத்த வரையில் இப்போது ஏராளமான நடிகர், நடிகைகள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் திரைக்குள் வர வர இதற்கு முன் நடித்துவந்த நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படுகின்ற வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் மக்கள் அந்த நட்சத்திரங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகின்றார்கள்.

இவ்வாறாக சின்னத்திரையின் மூலமாக அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஒரு ஜோடியே ஆல்யா-மானசா தம்பதியினர். அதாவது ஒரு சில வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் 'ராஜா ராணி' என்ற தொடரில் இணைந்து நடித்திருந்தார்கள். சீரியலில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துவிட்டார்கள்.



எனினும் தற்போது சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடித்து வர இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா எந்த தொடரிலும் இன்னும் நடிக்க தொடங்கவில்லை.ஆனால் புதிய தொடரில் இப்போதைக்கு கமிட்டாகியுள்ளார். 

நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா அண்மையில் இலங்கை சென்றுள்ளனர்.அத்தோடு  சென்னை கிளம்பியதில் இருந்து இலங்கை சென்றது வரை வீடியோவாக எடுத்து அதை தங்களது யூடியூப் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர்.

இதோ அவர்கள் வெளியிட்ட வீடியோ,





Advertisement

Advertisement

Advertisement