• Apr 24 2024

தற்கொலைக்கு முயலும் காவ்யா...தடுத்து நிறுத்திய ஜீவா..பரபரப்பு திருப்பங்களுடன் வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2. மேலும் இந்தத் தொடரின் முதல் சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசனும் பரபரப்பான எபிசோட்களை தந்து வருகிறது. திருமணத்தின்போது ப்ரியா கடத்தப்பட, ஜோடி மாறி திருமணம் நடைபெறுகிறது. எனினும் இதையடுத்து ஒருவரையொருவர் காதலித்து வந்த ஜீவா மற்றும் காவ்யா, ப்ரியா மற்றும் பார்த்தியுடன் மனதளவில் ஒன்ற முடியாமல் தவிப்பதாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறுஇருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவா மற்றும் பார்த்தியின் பெற்றோருக்கு 60ம் கல்யாணம் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த தன்னுடைய மாமனாரின் நண்பர், தன்னையும் ஜீவாவையும் ஹோட்டல் அறையில் வைத்து பார்த்து அட்வைஸ் செய்த நபர் என்பதை காணும் காவ்யா, கோயிலில் இருந்து வெளியேறுகிறார். மேலும் அவர் தன்னுடைய மாமியாரிடம் உண்மையை கூறிவிட்டுத்தான் செல்கிறார். ஆனால் இவ்வாறு தன்னுடைய மகனுக்கு காவ்யா துரோகம் செய்ததை நினைத்து அவர் அதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்.

காவ்யா தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற தாலியையும் அவர் மறைத்த நிலையில், காவ்யா மீது ஒட்டுமொத்த குடும்பமும் கோபம் கொள்கிறது. திருமணமும் நிற்கிறது.எனினும்  இதையடுத்து காவ்யா வீட்டிற்கு வர, அவரிடம் குடும்பத்தினரின் கோபம் எதிரொலிக்கிறது. மேலும் அவர் தனது நிலையை கூறக்கூட வாய்ப்பு தராமல், பார்த்தி, காவ்யா முன்னதாக கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார்.


ஆனால் தற்போது இதை ஏற்கும் மனநிலை காவ்யாவிற்கு இல்லை.இந்நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் காவ்யா தற்கொலைக்கு முயல அதனை தடுத்து நிறுத்துகின்றார் ஜீவா.இதனை ஏற்றுக்ககொள்ள முடியாமல் தன்னை சாக விடும் படி கேட்டு கத்துகின்றார்.இவ்வாறுஇருக்கையில் தாம் காதலிக்கும் போது சென்ற இடமெல்லாம் சென்று பார்க்கிறார்கள் இருவரும்.காவ்யா மற்றும் ஜீவா வாழக்ககை பயணத்தில் நிகழ இருக்கும் மாற்றம் என்ன என்ன..? என்று தற்போது ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...








Advertisement

Advertisement

Advertisement