• May 29 2023

தட்டிக் கேட்ட அண்ணணை பளார் என கன்னத்தில் அறைவிட்ட கதிர்..முற்றிய சண்டை...நடந்தது என்ன..?

Aishu / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

 அதிலும் குறிப்பாக இறுதியில் ஆதிரை கல்யாணம் யாருடன் நடக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. 

அதாவது அதில் ஜனனியின் ரூமிற்குள் சென்று ஜனனி யாருடன் கதைக்கிறார் எங்கு செல்கின்றார் என்பதை நோட்டம் இடுகின்றார் கதிர்.இதனை ரேணுகா கண்டு விட்டு கேள்வி கேட்க அந்த இடத்திற்கு ஜனனியும் வந்து திட்கின்றார்.


அதன் பின்னர்  “நாலுபேருக்கு ஊசி போட்டு விட்டு கஞ்சி கொடுத்து வளர்ந்தவை டீ நீ...” என ரேணுகாவை பற்றி பேச ஞானத்திற்கு கோவம் வந்து கதிரை கேள்வி கேட்டு சட்டையை பிடிக்க இருவருக்கும் சண்டை முற்றிவிடுகின்றது. 


இதன் பின் கடும் கோவத்தில் அண்ணன் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் பளார் என்று அடித்துவிடுகின்றார் கதிர். இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement