• Apr 19 2024

சுந்தரியை பழிவாங்க கார்த்தி போட்ட திட்டம்...நடக்கப்போவது என்ன...? பரபரப்பு திருப்பங்களுடன் சுந்தரி..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்திக் அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் அனுவின் நண்பனான சிவா எப்படியாவது கார்த்திக்கின் உண்மை முகத்தை அனுவுக்கு தெரியப்படுத்த புதிய திட்டம் போட்டு வருகின்றார்.ஆனால் ஒவ்வொன்றிலும் இருந்து கார்த்திக் தப்பித்து வருகின்றார்.இப்படியான நிலையில் சுந்தரி தன்னுடைய நண்பன் சித்துவுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கார்த்தி நேரடியாக சித்துவின் மாமா பொண்ணை சந்தித்து திருமணத்தை முற்படுகின்றார். அதாவது நான் யார்னு முக்கியம் இல்லை நான் சொல்லப்போற விஷயம் தான் முக்கியம் என்று கூறுகின்றார்.இதன் போது சித்துவையும் சுந்தரியையும் தவறாக பேசுகின்றார்.

அதன் பிறகு நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில் சுந்தரியும் சில விஷயங்களை காமெடியாக சொல்லும் போது சித்துவின் மாமா பெண்ணு தவறாக எண்ணுகின்றார்.அதாவது சுந்தரி ...“ சித்து உன் கழுத்தில் தாலி கட்டின பிறகு தான் உனக்கு எல்லா ரைட்ஸ் உம் இருக்கு...அதுவரைக்கும் எனக்கு தான் புல் ரைட்ஸ் ” என கூற அந்த பொண்ணு ஷாக்கடைகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

 

Advertisement

Advertisement

Advertisement