• Jun 04 2023

சித்துவின் திருமணத்தை நிறுத்த கார்த்திக் போட்ட புது பிளான் - கல்யாணத்துக்கு வர ஓகே சொன்ன அனு- சுந்தரி எடுக்கப்போகும் முடிவு என்ன?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்திக் அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் அனுவின் நண்பனான சிவா எப்படியாவது கார்த்திக்கின் உண்மை முகத்தை அனுவுக்கு தெரியப்படுத்த புதிய திட்டம் போட்டு வருகின்றார்.ஆனால் ஒவ்வொன்றிலும் இருந்து கார்த்திக் தப்பித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் சுந்தரி தன்னுடைய நண்பன் சித்துவுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக பத்திரிகை கொடுப்பதற்காக அனு வீட்டுக்காக வந்திருக்கின்றார் சுந்தரி. இதனை அறிந்த கார்த்திக் சுந்தரி நடத்த இருக்கும் சித்துவின் திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்று புது ப்ளான் போட்டிருக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement