• Apr 25 2024

ஜீவா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட கண்ணன்- உண்மை எல்லாவற்றையும் அறிந்து கொண்ட முல்லை- கடும் கோபத்தில் இருக்கும் மூர்த்தி

stella / 10 months ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணன் வீட்டில் நடந்த அனைத்து விடயங்களையும் பார்த்த மீனா ஜீவாவுக்கு போன் செய்து கண்ணன் கடன் வாங்கிய விஷயத்தையும் கதிரை போலீஸ் பிடிச்சிட்டு போன விஷயத்தையும் சொல்கின்றார். இதைக் கேட்ட ஜீவா அதிர்ச்சியடைந்து இப்போதே கிளம்பி வருவதாக சொல்கின்றார்.


அதன் பின்னர் ஐஸ்வர்யா, கண்ணன் மீனாவிடம்  ஜீவாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லுமாறு சொல்லச் சொல்கின்றார். மீனா ஜீவாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டதாக சொல்கின்றார். அதன் பின்னர் மண்டபத்திற்கு இன்னும் யாரும் வரவில்லையே என்று மண்டபத்தில் இருந்து ஐஸ்வர்யாவுக்கு போன் பண்ண ஐஸ்வர்யா கண்ணனை பேசச் சொல்லி போனைக் கொடுக்கின்றார்.

மேலும் வளைகாப்பு நடக்க வேணாம் என்று சொல்ல ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவை தனியாக அழைத்துச் சென்று அதெப்படி வளைகாப்பு பண்ண முடியாமல் இருக்க முடியும் வளைகாப்பை கண்டிப்பாக பண்ணியே ஆகனும் மண்டபத்தி்கு காசு எல்லாம் கட்டியாச்சு எல்லோருக்கும் சொல்லியாச்சு அப்பிறம் எப்பிடி வளைகாப்பு பண்ண முடியாமல் இருக்க முடியும் என அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.

தொடர்ந்து முல்லை வீட்டில் எதற்காக கதிரைப் பிடித்திட்டு போனாங்க என்று தெரியாமல் முல்லை அழுது கொண்டே இருக்க அவருடைய அம்மாவும் தனமும் ஆறுதல்ப்படுத்துகின்றனர்.அந்த நேரம் பார்த்து வரும் மீனா எதற்காக கண்ணனை கைது செய்து கொண்டு போனாங்க தெரியுமா என உண்மை எல்லாவற்றையும் சொல்கின்றார். இதைக் கேட்ட முல்லையின் அம்மா கண்ணனை திட்டுகின்றார்.


இதைத் தொடர்ந்து கண்ணன் போலிஸ் ஸ்டேசனுக்குச் சென்று கதிரைப்பார்த்து மன்னிப்புக் கேட்கின்றார். தொடர்ந்து ஜீவாவும் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து கதிரை ஆறுதல்ப்படுத்துகின்றார். ஜீவாவைக் கண்ட கண்ணன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றார். பின்னர் ஜீவா கண்ணனை சமாதானப்படுத்தி விட்டு மூர்த்தியிடம் கூட்டிக் கொண்டு போகின்றார். கண்ணனைக் கண்ட மூர்த்தி கண்டபடி திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement