• Apr 20 2024

கண்ணனை வேலைவாங்கி எரிச்சல் படத்திய ஐஸ்வர்யா- அண்ணன் கூடவே இருந்திருக்கலாம் எனக் கூறிய கண்ணன்- திட்டித் தீர்த்த மூர்த்தி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி கடைப் பணத்தைக் கொண்டு வந்து தனத்திடம் கொடுத்த பின்னர் கதிர் தன்னால் கொஞ்ச நாளைக்கு பணம் தரமுடியாது என்று சொல்கின்றார்.இதனால் மூர்த்தி ஹொட்டல் நட்டமாகப் போகின்றதா என விசாரிதது விட்டுச் செல்கின்றார். தொடர்ந்து முல்லை பணத்தை எடுத்து ஐஸ்வர்யாவுக்கு செலவழித்து விட்டீர்களா என்று கேட்கிறார்.


அதற்கு கதிர் ஆம் என்று சொல்ல இதை அண்ணன் கிட்டை சொல்லி இருக்கலாம் தானே இப்படி எதுவும் சொல்லாததால் தான் பிரச்சினையே என முல்லை சொல்ல கதிர் சமாளிக்கின்றார். பின்னர் போஃனையே பார்த்திட்டு இருக்கும் ஐஜ்வர்யா கண்ணனை வேலை வாங்குகின்றார். முதலில் தண்ணீர் எடுத்து தர சொல்கின்றார்.

பின்னர் மாத்திரை எடுத்து தா கண்ணா போனுக்கு சார்ஜ் போட்டுத் தா என்று எல்லாம் சொல்ல கண்ணன் அதிர்ச்சியடைகின்றார். பின்னர் கதிரும் முல்லையும் பேசிட்டு இருக்கும் போது கதிர் கண்ணன் ஹாஸ்பிட்டலில் பட்டபாட்டை எடுத்து சொல்ல முல்லை கோபப்பட்டு திட்டுகின்றார். இதனால் ஒரு மாதிரி கதிர் அவரை சமாளிக்கின்றார்.


தொடர்ந்து ஐஸ்வர்யா கண்ணனை நீ நாளைக்கு வேலைக்கு போக வேணாம். போனால் நான் தனிய இருக்கணும் என்று சொல்ல கண்ணன் பேசாம அணணன் வீட்டிலையே இருந்திருக்கலாம். என்னை நீ இப்படி வேலை வாங்கிட்டு இருந்திருக்க மாட்ட தனியாவும் இருந்திருக்க தேவையில்லை என்று சொல்ல ஐஸ்வர்யா கோபப்பட்டு திட்டி விட்டு துாங்குகின்றார்.

பின்னர் மூர்த்தி எல்லோரும் இருக்கும் போது ஐஸ்வர்யாவும் கண்ணனும் யூடியூப் சேனல் ஆரம்பித்த விஷயத்தை பற்றி கேட்கின்றார். அத்தோடு ஐஸ்வர்யா ஹாஸ்பிட்டலில் இருந்திச்சாமே என்று எல்லாரும் வந்து என்னைக் கேட்கிறாங்க. வீட்டு விஷயங்களை அதில சொல்லுறது நல்லாவா இருக்கு.உடனடியாக நிறுத்த சொல்லுங்க என கோபப்பட்டு திட்டுகின்றார். இதனால் கதிர் கண்ணன் கிட்ட இது பற்றி பேசுவதாக சொல்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement