• Mar 29 2024

கண்ணன், ஐஸ்வர்யா முன்னாடி மாமனாரை அவமானப்படுத்திய ஜீவா- கடும் சோகத்தில் கிளம்பிய மூர்த்தி- நக்கலடித்த மீனா

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வளைகாப்புக்கு சொல்ல வந்திருக்கும் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் மீனாவின் அப்பா கேள்வி கேட்டு அவமானப்படுத்துகின்றார்.வளைகாப்பை மண்டபத்துக்கு வெளியே பந்தல் போட்டு நடத்திறியா காசு இருக்கா என்று கேட்க ஜீவா கடுப்பாகி இதென்ன கேள்வி எங்க செபந்தக்காரங்க வந்தாலும் இப்படித் தான் கேட்பீங்களா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தால எதவும் பண்ண முடியாது என்று நினைச்சீங்களா என  பல கேள்விகளை மாமனாரிடம் கேட்கின்றார்.


இதனால் அவர் அங்கிருந்து கிளம்பியதும் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் சமாதானப்படுத்தி விட்டு ஜீவா அவர்களை அனுப்பி வைத்து விடுகின்றார். தொடர்ந்த மீனா வந்ததும் ஜீவா எங்க அப்பாவை தப்பா பேசிட்டார் என்று மீனாவின் அம்மா சொல்ல மீனா தன்னுடைய அப்பா அம்மாவின் பேச்சை நம்பவே இல்லை. நீங்க ஏதோ பண்ணியிருக்கிறீங்க அதான் ஜீவா அப்பிடி சொல்லி இருக்கிறான் என்று சொல்ல ஜனார்த்தன் கோபமாக உள்ளே கிளம்பி சென்று விடுகின்றார்.

தொடர்ந்து இதெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜீவா மீனாவைக் கட்டிப்பிடித்து யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டியா என் மேல அவ்வளவு நம்பிக்கை என்று சொல்லி விட்டு பேசாமல் நீயும் நானும் அண்ணன் கூடவே இருந்திருக்கலாம் என்று இருக்கு ஏன் வந்தோமோ தெரில என்று சொல்ல மீனா இப்பவாச்சும் தோணிச்சே உனக்கு என்று ஜீவாவைப் பார்த்து நக்கலடிக்கின்றார்.


தொடர்ந்து மூர்த்தியை வீதியில் கண்ட ஜீவாவின் மாமனார் ஜீவா தன்னுடைய வீட்டில் தான் சந்தோஷமாக இருப்பதாக பில்டப் கொடுக்க மூர்த்தி கவலையுடன் அங்கிருந்து கிளம்பி இளநீர் கடையில் இளநீர் குடிக்கின்றார். இதைப் பார்த்த ஜீவா மூர்த்தியிடம் பேச வர எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement