• Apr 25 2024

பளாரென கன்னத்தில் அறைவிட்ட கண்ணம்மா...திடீரென அந்த இடத்திற்கு வந்த பாரதி..இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களுக்கு கவரும் வகையில் அடுத்தடுத்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

 மது கண்ணம்மாவை அழைத்துக்கொண்டு மேலே சென்று நீங்க இரண்டு பேரும் ஜோடியாக சென்று வந்தீங்களே.உங்களுக்கு என்ன ஆச்சு...டெவலப் ஆச்சா என சிரித்துக்கொண்டு பல கேள்விகளை கேட்கின்றார்.



கண்ணம்மாவை பதில சொல்ல விடாமல் கேட்க...அந்த நேரம் சாந்தி என்ன இரண்டு பேரும் ரகசியம் பேசிட்டு இருந்தீங்க நான் வந்ததும் நிறுத்திட்டீங்க என கேட்டு என்ன மது அந்த விஷயமா? வெண்பா அடிச்சது பற்றி சொல்றியா என கேட்க மது  ஷாக்கடைகின்றாள். கண்ணம்மா நடந்த விஷயத்தை கேட்டு மதுவை அழைத்துக் கொண்டு வெண்பாவை பார்க்க கிளம்புகிறார்.



இருவரும் வண்டியில் சென்று எதிரே காரில் வரும் வெண்பாவை வழிமறிக்க மது வேண்டாம் என சொல்ல கண்ணம்மா நீ அமைதியா இரு என சொல்லி பேச காரிலிருந்து இறங்கி வரும் வெண்பா எங்க ஸ்கூல்ல வேல பாத்து எங்ககிட்ட சம்பளம் வாங்குற நீ என்னை டீ போட்டு பேசுவியா? என கன்னத்தில் அறைய கை ஓங்க கண்ணம்மா முறைத்து பார்த்ததும் அப்படியே நிறுத்துகிறார் வெண்பா.



இதன் பிறகு மது டீ போட்டு பேசுனதுல உனக்கு என்ன பிரச்சனை நீ வெளிநாடு போயிட்டு படிச்சிட்டு வந்துட்டா எல்லாம் மாறிடுமா? உன் கூட படிச்சவங்க எல்லாரும் உங்களுக்கு அடிமை ஆய்டுவாங்களா என்று கேட்டு வெண்பாவை பளார் என அறைகிறார்.


வெண்பா மீண்டும் கண்ணம்மாவை அறைய போக அங்கு வரும் பாரதி வெண்பாவை திட்டி தடுத்து நிறுத்துகிறார்.


அத்தோடு  கண்ணம்மா செய்ததில் என்ன தவறு இருக்கு? நீ மதுவை அடிச்சது தப்பு மது நம்ம வீட்ல ஒத்தாசையா இருக்கான்றதால அவள வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது நாம எல்லாரும் ஒண்ணா படிச்சவங்க ஒரே கிளாஸ்மேட், இந்த பிரச்சனையை இதோட நிறுத்திக்க என எச்சரிக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement