விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இத்தொடரின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கல்யாணத்துக்காக மண்டபத்தில் ஷர்மிளா எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா வர அவரை வரவேற்று உள்ளே உட்கார வைக்கிறார்.
அதன் பிறகு லட்சுமி குடிக்க தண்ணீர் வேண்டுமென கேட்க கண்ணம்மா அவளை தண்ணீர் குடிக்க கூட்டிச் செல்ல இவர்களைப் பார்த்த சாந்தி வெண்பாவிடம் விஷயத்தை சொல்ல இருவரும் கண்ணம்மாவை வெறுப்பேத்த முயற்சி செய்ய அப்போது கண்ணம்மா நான் கல்யாணத்துக்கு வரல இந்த கல்யாணம் நடக்குதா இல்லையா என்று பார்க்க வந்தேன்.
இந்த வெண்பா யாரு என்னெல்லாம் வேலை பண்ணுவாளு என்று எனக்கு தெரியும். யாருக்குத் தெரியும் கடைசி நேரத்துல நீ கல்யாணத்தை நிறுத்தலாம் மண்டபத்து விட்டு எஸ்கேப் ஆகலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அத வேடிக்கை பார்க்க தான் வந்தேன் என கூற வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
மேலும் இந்த பக்கம் டிஎன்ஏ ரிசல்ட்க்காக காத்திருக்கும் பாரதி கிளினிக்கு போன் போட்டு டிஎன்ஏ ரிசல்ட் என்னாச்சு இன்னும் வரவில்லை வந்ததும் போன் பண்ணுவதாக கூற பாரதி கொஞ்சம் சீக்கிரம் கொடுக்க பாருங்க என கெஞ்ச அவர்களும் முடிந்தளவுக்கு சீக்கிரம் கொடுக்கிறோம் என சொல்கின்றனர்.
அடுத்து ரூம் வெண்பா உட்கார்ந்து இருக்க அங்கு வரும் ரோஹித் வெண்பாவிடம் ரொமான்ஸ் செய்ய இது எல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார். இதன் பிறகு ரோஹித் வெளியே வர வெண்பா பாரதிக்கு போன் போட்டு கோவிலுக்கு போயிட்டியா எங்க இருக்க என்ன கேட்க பாரதி வீட்டில் தான் இருக்கிறேன் என சொல்ல வெண்பா திட்டுகிறார்.
Listen News!