• Apr 18 2024

அபியை புதிய சிக்கலில் சிக்க பிளான் போட்ட கண்மணி- இரண்டாவது திருமணம் செய் என வெற்றியை வற்புறுத்திய அபி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது கண்மணியை பொண்ணு பார்க்க வருகின்றார்கள். அப்போது வெற்றி பெண் பார்க்க வந்தவர்களிடம் கண்மணிக்கு பிரமாண்டமாக சீர்வரிசை செய்து தருவதாக கூறுகின்றார். இதற்கிடையில் கண்மணி மாப்பிள்ளைக்கு போன் பண்ணி கண்மணியும் வெற்றியும் குடும்பமாக வாழந்திட்டு இருக்கிறாங்க.

நீ கண்மணியை வெடிங் பண்ணி கூட்டிட்டு போனாலும் வெற்றி திரும்ப வந்து கண்மணியை கூட்டிட்டு போய்டுவான் என்று கூறுகின்றார். இதனைக் கேட்ட மாப்பிள்ளை கண்மணியை் பார்க்க முதலே இந்த கல்யாணம் வேணாம் என்கிறார். அத்தோடு வெற்றிக்கும் கண்மணணிக்கும் தொடர்பு இருக்கு என்று தவறாகக் கூறிவிட்டு சென்றதால் கண்மணியின் அப்பா கவலையடைகின்றார்.


தொடர்ந்து அபி வீட்டுக்கு வரும் வெற்றியிடம் நீ சைக்கோ உன்னுடைய அம்மா எதுக்கு என்னை வந்து பார்க்கணும் நீ தானே  உங்க அம்மாவை ஏத்தி விடுற என்று வெற்றியை திட்டுகின்றார்.பதிலுக்கு வெற்றியும் அபியை திட்டுகின்றார். அபி நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என சொல்ல வெற்றி அபியின் திமிர் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைகின்றார்.

தொடர்ந்து கண்மணி ராதாவின் கணவரிடம் அபியை புதிய சிக்கலில் சிக்க வைத்த  கதையைச் சொல்கின்றார். ராதாவுக்கும் அபிக்கும் இடையில் பிரச்சினையை மூட்டி விட புதிய பிரச்சினையை கிளப்பி விடுகின்றார்.இதனால் அபி எப்படி இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement