• Mar 29 2024

நாடாளுமன்றில் படப்பிடிப்பை நடத்த அனுமதி கேட்டு... நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதிய கங்கனா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இருப்பினும் சமீபகாலமாக இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். 


இதன் காரணமாக பல வழக்குகளையும் சந்திக்கிறார். அதுமட்டுமல்லாது பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அந்தவகையில் இவர் தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' என்ற படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்தை அவரே டைரக்டும் செய்கிறார்.

இப்படத்தில் இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் தற்போது எழுந்து உள்ளது. இதில் கங்கனாவின் இந்திராகாந்தி தோற்றம் பற்றிய புகைப்படம் ஏற்கனவே வெளியாகி வைரலானது. 


இந்த நிலையில் தான் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் 'எமர்ஜென்சி' படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார். இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் ஒன்றினையும் எழுதி உள்ளார். இதுவரைகாலமும் நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை. கங்கனா இவ்வாறு அனுமதி கேட்டு இருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement