• Apr 20 2024

தலையில் அடிப்பட்டது உண்மையா... கேள்வியாலேயே ஷெரினாவை மடக்கிய ஏடிகே... பாராட்டிய கமல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக ஒரு மாதத்தை எட்டி உள்ளது. இதில் ஏற்கெனவே 3 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் நேற்றைய  தினம் ஷெரினா குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.


அந்தவகையில் நேற்றைய எபிசோடில் கமல் யாருமே எதிர்பார்க்காத வகையில் போட்டியாளர்களுக்கு இடையே ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்தார். அதாவது போட்டியாளர்களில் ஒருவர் செலிபிரிட்ரி ஆகவும் ஒருவர் நிருபராகவும் இருக்க வேண்டும் எனக் கூறினார். இதில் செலிபிரிட்ரி நிருபர் கேட்கும் கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதில் கூற வேண்டும். 


அந்தவகையில் ஏடிகே நிருபராக இருந்து ஷெரினாவை மடக்கி மடக்கி பல கேள்விகளை கேட்டார். அதில், பிக்பாஸ் வீட்டில் ஏன் மலையாளத்தில் பேசுறீங்க என்றும், நீங்கள் ஒரு சிலருடன் மட்டும் தான் பேசுகிறீர்கள் மற்றவர்களிடம் பேசுவது இல்லை, அது ஏன் என்றும் கேள்வி கேட்டார்.

இத்தோடு கேள்வி கேட்பதை ஏடிகே நிறுத்திவிடுவார் என்று பார்த்தால், கேள்வியை நிறுத்தாமல் பொம்மை டாஸ்கின் போது நீங்க கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக சொன்னீங்க, தலையில் அடிபட்டது உண்மையா? பொய்யா? என்று ஷெரினாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். 


இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஷெரினா, உடனே "அடிபட்டது உண்மைதான், அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தா மைனா மற்றும் ரச்சிதா ஆகியோருடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்றார். இருவரின் கேள்வி பதிலை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த கமல், இந்த பேட்டிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று ஏடிகேவை பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement