• Mar 28 2024

பிக்பாஸில் எந்தவொரு சீசனிலும் நடைபெறாத சம்பவத்தை நிகழ்த்திய கமல்ஹாசன்- குறும்படத்தால் வெளிச்சமான உண்மைகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட நானும் பொம்மை நீயும் பொம்மை போட்டியில் பலரும் தங்களது மிருகத்தனமான குணத்தை வெளிக்காட்டினார்கள் என்று கூறலாம். அதில் முக்கியமானவர் அசீம் தான். அவ்வப்போது இவர் தனலட்சுமி உடன் போட்ட சண்டை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. 

முன்னதாக நீ எல்லாம் பொண்ணா என திட்டிய அசீம். பின்னர் பலருடனும் சண்டை ஈடுபட்டார். விக்ரம், அமுதவாணன் என அனைவருடனும் மிகவும் மோசமான வார்த்தைகளோடு சண்டையிட்ட இவர்,  இறுதியாக தனலட்சுமியின்  தோள்பட்டையில் கைவைத்து உள்ளே தள்ளிவிட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என விக்ரம் உள்ளிட்டோர் அசீமுடன் சண்டையிட்டனர். ஆனால் அவர்களது பாடி லாங்குவேஜை காட்டி மிகவும் மோசமாக விமர்சனங்களை அள்ளி வீசினார் அசீம். இதனால் இவரின் நடவடிக்கைகளை கமல்ஹாசன் கண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இன்று வீட்டில் உள்ள போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் குறும்படம் போட்டுக்காட்டியிருக்கின்றார். அதுவும் ஒருமுறை மட்டுமல்லாது மூன்று தடவை போட்டுக் காட்டியிருக்கின்றார். அத்தோடு அதில் தனலக்ஷ்மி மட்டும் தள்ளவில்லை என்பதை நிரூபித்ததோடு அதில் நின்ற ஏனைய போட்டியாளர்களினால் தான் ஷெரின் தள்ளப்பட்டார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.


இதனை அடுத்து அசீம் மற்றும் ஷெரினாவை தனலக்ஷ்மியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்ல அவர்களும் மன்னிப்புக் கேட்டனர். பின்னர் அசீமை முறையாகக் கண்டித்தார். அத்தோடு கேமில் இதெல்லாம் சகஜம் என்பதையும் புரிய வைத்தார் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement

Advertisement