• Mar 29 2024

சமந்தாவின் நிலைகண்டு மனமிரங்கிய நாகசைத்தன்யா- விரைவில் சேரப்போகின்றார்களாம்- அதிரடியாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய யசோதா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இதனை அடுத்து குஷி மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு கெரியரில் பிஸியாக இருக்கும் சமந்தா குறித்த புதிய தகவல் வைரலாகி வருகின்றது.


அதாவது சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பிரமாண்டமாக நடந்தது. குழந்தை பெறும் ஆசையில் புதுப்பட வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தார் சமந்தா. 

 விரைவில் குட் நியூஸ் சொல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.இது ரசிகர்களையும் கடுமையாக அதிர்ச்சியடையச் செய்தது. இதனை அடுத்து அண்மையில் தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக அறிவித்தார்.

அதை பார்த்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.இந்த நேரத்திலும் சமந்தா தைரியமாக இருப்பதை பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தாராம். நாக சைதன்யா பேசிய பிறகு சமந்தா மனம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.


மீண்டும் நாக சைதன்யாவுடன் சேர்ந்து வாழ சமந்தா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இதை சமந்தா உறுதி செய்யும் வரை நம்ப முடியாது.சமந்தாவை பிரிந்தாலும் அவரை பற்றி நாக சைதன்யா எதுவுமே தவறாக பேசியது இல்லை. தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா என்று விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு கூட நாக சைதன்யா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement