• Apr 19 2024

கணவர் இறந்து ஒரு மாதத்திலேயே உயிரை விட்ட கே. விஸ்வநாத்தின் மனைவி- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநராக இவர் இயக்கிய சலங்கை ஒலி ,சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய  திரைப்படமாகும்.

நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.


50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இவர் மரணமடைந்தது சினிமா உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


ல் அவருடைய மனைவி ஜெயலட்சுமி இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கே. விஸ்வநாத், அவர்களும் அண்மையில் இறப்புக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement