• Mar 29 2024

தனம் வீட்டுக்குச் சென்ற மீனா வாசலிலேயே நின்ற ஜீவா- ஆட்டம் போட்டு கீழே விழுந்த ஐஸ்வர்யா- எதுவும் புரியாமல் நின்ற கண்ணன்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது ஜீவா அனுப்பி வைத்த ஆளை மூர்த்தி வேலைக்கு எடுக்காதால் ஜனார்த்தனன் ஜீவாவை ஏற்றி விடுகின்றார். பின்னர் தனமும் மலு்லையும் சமைத்துக் கொண்டிருக்கும் போது மீனா அவர்களின் வீட்டிற்குச் செல்கின்றார். மீனாவைப் பார்த்ததும் இருவரும் செம குஷியில் இருக்கின்றனர். அப்போது மீனா சேர்ட்ரிபிகேட் எடுக்க வந்த விடயத்தை சொல்கின்றார்.


இதனால் தனமும் சேர்ட்ரிபிகேட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்ததும் மீனா நான் போய்ட்டு வாறேன் அக்கா ஜீவா வெளில நிக்கிறான் என்று சொல்ல தனம் வந்து ஜீாவைப் பார்க்கின்றார். ஆனால் ஜீவா எதுவும் சொல்லாமல் காரை எடுத்துக் கொண்டு மீனாவை ஏற்றிச் சென்று விடுகின்றார்.

தொடர்ந்து ஐஸ்வர்யா என்னோட வளைகாப்பை சிறப்பாகப் பண்ணனும் . இப்பபே நிறைய வீடியோ பண்ணி போட ஆரம்பித்தால் தான் சரி என்று கண்ணனுக்கு கூறுகின்றார். பின்னர் விடிஞ்சதுக்கு பிறகும் ஐஸ்வர்யா போனையே பார்த்துக் கொண்டு இருந்ததோடு இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆப் போடலாம் என்று சொல்லி இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.

டான்ஸ் ஆடும் போது ஐஸ்வர்யா கீழே விழுந்து விடுகின்றார். பின்னர் அவரைக் கண்ணன் துாக்கி விட எனக்கு ஒன்றுமில்லை நல்லாத்தான் இருக்கிறேன் என்று கூறுகின்றார். அத்தோடு தாம் ஆடிய வீடியோவை இருவரும் பார்த்து சிரிக்கின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


அடுத்து வரும் நாளைய எப்பிஷோட்டில் ஐஸ்வர்யா வயிற்று வலியால் துடிக்கிறார் கண்ணன் அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் சேர்க்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement