• Apr 18 2024

மூர்த்தியை நிற்க வைத்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே போன ஜீவா- அதிர்ச்சியில் உறைந்த கதிர் மற்றும் தனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணனை மூர்த்தி அறைந்ததால் ஐஸ்வர்யா கண்ணனை தனியாகக் கூட்டிச் செல்கின்றார். பின்னர் ஜீவா ஒவ்வொன்றாக கேட்கின்றார். அதாவது கதிர் கண்ணன் வேலைக்கு போறதால தான் என்னை இப்படி நடத்திறீங்களா. கதிர் கார் வாங்கின விஷயத்தைக் கூட நீங்க சொல்லல.அதுவே  பின்பு தான் தெரிஞ்சிச்சு.


என்கிட்ட சொல்லணும் என்று தோனல தானே, மீனா பாத்ரூம் கட்டித் தர சொன்னா அப்ப கூட நான் உங்க பக்கம் தானே நின்றேன். ஆனால் நீங்க யாருமே அதை கண்டுக்கல, நீங்க எல்லாருமே உங் மாமனார் வீட்டுக்கு எல்லாமே பண்ணுவீங்க நான்  மட்டும் பண்ணினால் தப்பு, கல்யாண பத்திரிகை வைக்கப் போகும் போது உங்க கிட்ட சின்ன குழந்தை மாதிரி எல்லாத்திற்கும் கேட்டிட்டே நிற்கணும்.

வெளில எங்கையாவது போனால் அடிக்கடி போன் பண்ணிட்டே இருப்பீங்க. எல்லாரும் என் பொண்டாட்டி என் குழந்தை என்று நினைக்கிற மாதிரி நானும் நினைச்சிருந்தா என்னை இப்படி எல்லாம் நடத்தி இருப்பீங்களா, கதிர் தனியா சம்பாதிக்கிறான். கண்ணன் தனியா சம்பாதிக்கிறான் நான் உங்க கடைல சும்மா தானே இருக்கிறேன் அதனால என்னோட பெயரை விட்டிட்டு மொய் எழுதினீங்களா.


என்னோட மாமனார் கார் கொண்டு வந்து கொடுத்தாரு அதையும் திரும்ப கொண்டு போய் கொடுக்க சொன்னீங்க. நீங்க சொல்லுற படி தானே நடக்கிறேன். அன்டைக்கு கடை திறந்து போட்டுட்டு போனதுக்குஎன்ன ஏது என்று கேட்காம திட்டிறீங்க இதுவே கதிர் என்றால் கேட்டிருப்பீங்க திட்டியிருக்க மாட்டீங்க தானே. ஜீவா என்றால் தப்பு மட்டும் தான் பாணுவான் என்று நினைக்கிறீங்க என எல்லோர் முன்னாடியும் வைத்து மூர்த்தியை ஜீவா கேள்வி கேட்கின்றார். மீனா சமாளிக்கப் பாக்கின்றார் ஆனால் அவருடைய அப்பா அவர் கேட்கட்டும் நீ சும்மா இரும்மா என்றும் அடிக்கடி சமாளிக்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement