• Apr 20 2024

“ விக்னேஷ் சிவனின் பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்..” அஜித் மேலாளர் மீது போலீசில் புகார்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடியாக விளங்குபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாக அறிமுகமாகி பின்பு காதலிக்க ஆரம்பித்தனர்.

எனினும் இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதேபோல் நயன் அவர்கள் O2 காட்பாதர், கனெக்ட், ஜவான், திரில்லர் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் இந்த மாதம் 9ம் திகதி திருமணத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.மேலும் தங்களது திருமணத்திற்காக சில முக்கியமான நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வைத்துள்ளனர்.

இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கோலாகலமாக நடக்க இருக்கிறது.தற்போது இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் மேலும், ஜுன் 9ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.

முழுக்க முழுக்க பாரம்பரியமான முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் இதையொட்டி விக்னேஷ் சிவன் சென்னை தாஜ் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருக்கும் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்தினரும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். பிரபலமான தனியார் செய்தித் தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர் ஆனந்த், விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நிருபர் ஆனந்தை பார்த்து மிரட்டல் தொனியில் யாரென கேட்டு செய்தி நிறுவனம் குறித்து அவதூறாக பேசியதாக சொல்ப்படுகின்றது. பின் நிருபர் ஆனந்த்தும் பதில் பேசி இருக்கிறார். பிறகு இருவரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து ஆனந்தன், சுரேஷ் சந்திராவை அழைத்து வருத்தம் தெரிவிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஆனந்தின் அழைப்பை ஏற்கவில்லை. பின் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் நாசர், தியாகு ஆகியோர் ஆனந்தை தாக்கியிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி உள்ளனர். மேலும் இதுகுறித்து நிருபர் ஆனந்தன், அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அண்ணாசாலை காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், செய்தி சேகரிக்க சென்ற என்னையும் நிறுவனத்தையும் சுரேஷ் சந்திரா அவதூறாக பேசி இருக்கிறார். என்னை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்திலிருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளி இருக்கிறார். ஆகவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் சமூகவலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement