• Sep 30 2023

மீனாவைப் பார்த்து ஆச்சரியப்படும் ஜீவா- தனத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி- Pandian Stores Serial

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தனத்தற்கு கான்சர் நோய் என்றதால் மூர்த்தி அதிர்ச்சியடைந்ததோடு தனத்திடம் போய் பேசுகின்றார். அப்போது தனம் அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா எனக்கு சீக்கிரமா சரி ஆகிடும் ஆப்பிரேஷன் செய்து கட்டி எல்லாம் எடுத்தாச்சு மாமா நீங்க கவலைப்படாமல் இருங்க மாமா என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.


தொடர்ந்து தனத்தின் அண்ணாவும் அண்ணியும் எல்லாம் சரி ஆகிடும் உனக்கு ஏதாவது தேவை என்றால் எங்களைக் கூப்பிடு என்று சொல்லி விட்டுச் சொல்கின்றார். இவ்வாறு முல்லையின் அப்பா மற்றும் மீனாவின் பெற்றோரும் கிளம்பி விடுகின்றனர். பின்னர் எல்லோரும் தனத்தின் ரிப்போட் மாத்திரை எல்லாவற்றையும் பார்க்கின்றனர்.

அப்போது தனம் முல்லையும் மீனவையும் ரொம்ப பாடாய் படுத்திட்டேன்.அவங்க ரெண்டு பேரும் இல்லை என்றால் என்னால, ஆப்பிரேஷன் பண்ணி இருக்க முடியாது என்று சொல்கின்றார். அத்தோடு தனத்தின் குழுந்தைக்கு இவ்வளவு நாளும் முல்லை தான் பால் கொடுத்தார் என்ற விஷயமும் தெரிய வந்து விடுகின்றது.அப்போது முல்லை எனக்கு முதல் இதெல்லாம் மீனாவுக்கு தான் தெரியும். அவங்க தான் முதலில் அக்கா கூட இருந்தாங்க என்று சொல்ல ஜீவா மீனாவை ஆச்சரியப்பட்டு பார்க்கின்றார்.


அப்போது தனம் ஐஸ்வர்யாவுக்கு இன்டைக்கு காலைல தான் விஷயம் தெரியும் என்று சொல்ல மீனா, முதன்முலாக ஐஸ்வர்யா இன்டைக்கு போட்ட வீடிாயவால் தான் நல்லது நடந்திருக்கு என்று சொல்கின்றார். பின்னர் அண்ணம் தம்பிகள் நால்வரும் தனம் அருகில் இருந்த பேசுவதைப் பார்த்து முல்லை மீனா ஐஸ்வர்யா எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.


மீண்டும் எல்லோரும் கூடி இருந்து கதைக்கும் போது ஜீவா பீல் பண்ண கதிர், அடுத்ததாக என்ன பண்ணனும் எப்படி அண்ணியை இதிலிருந்து மீட்கலாம் என்று யோசிப்போன் என்று சொல்கின்றார். மூர்த்தியும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தனம் பக்கம் நின்றாலே அவளைக் காப்பாத்திடலாம் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement